திருச்செந்தூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக கருதப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனால் கோவிலின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் மார்ச் மாத உண்டியல் வசூல் கடந்த 15 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண்ணப்பட்டது.
கடந்த 15ம் தேதி திறந்த எண்ணப்பட்ட உண்டியலில் ரூ.53 லட்சத்து 61 ஆயிரத்து 507 ரொக்கம், தங்கம் 586 கிராம், வெள்ளி 14 கிலோ 260 கிராம் கிடைத்தது. நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக உண்டியலைத் திறந்து எண்ணும்போது ரூ.47 லட்சத்து 1, 592ம், கோசாலை உண்டியலில் ரூ.13, 280ம், அன்னதான உண்டியலி்ல் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 123ம், கோசாலை அன்னதான உண்டியலில் ரூ.3,992ம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.1,668ம் ஆக மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 162 வசூலாகியுள்ளது.
மேலும் 928 கிராம் தங்கமும், 16,950 கிராம் வெள்ளியும் வசூலாகியிருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியை கோவில் இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் செல்லத்துரை, தூத்துக்குடி உதவி ஆணையர் வீரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, கண்காணிப்பாளர்கள் ராமசாமி, சுப்பையா, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கேடசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள பார்வையிட்டனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications