அரசியல் பிரமுகர்களால் தாக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் தாசில்தார் இடமாற்றம்
தூத்துக்குடி: அரசியல் பிரமுகர்களால் தாக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதே போன்று மேலும் 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தாசில்தாராக இருந்தவர் சுப்பையன். அவருக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் மணல் வண்டிகளை பிடித்தது மற்றும் தலையாரி நியமனம் குறித்து மோதல் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் தாலுகா ஆபிசில் வைத்து தாசில்தார் சுப்பையன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக தாசில்தார் உள்பட 51 பேர் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து மணியாச்சி டிஎஸ்பி ராஜேந்திரன் விசாரணை நடத்தி வந்தார்.
தாசில்தார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்களை கைது செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் வேலைநிறுத்தம் செய்தனர். நெல்லை மாவட்டத்திலும் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிரச்சனையில் சிக்கிய ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுப்பையன் தூத்துக்குடி பறக்கும் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று மேலும் 8 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன் ஓட்டப்பிடாரத்திற்கும், ஓட்டப்பிடாரம் சமூக திட்ட தாசில்தாராக இருந்த மகேஸ்வரன் தூத்துக்குடி கேபிள் டிவி துணை மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் உதவியாளராக இருந்த 3 பேர் துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார்கள் 4 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதை கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications