சச்சின் எம்.பியாவதை எதிர்த்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Supreme court
டெல்லி: கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் செய்துள்ள செயற்கரிய சாதனைகளைப் பாராட்டி மத்திய அரசு அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கியுள்ளது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது என்று கூறி ராம்கோபால் சிங் சிசோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் புகழ்பெற்றவர்களை மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். நீதிபதி தீபக் வர்மா தலைமையிலான பெஞ்ச் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்து தள்ளுபடி செய்தது.

மேலும் இது குறித்து அவர் உரிய உயர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

16ல் பதவியேற்கும் சச்சின்:

சச்சின் டெண்டுல்கர் வரும் 16ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கிறார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் கடந்த மாதம் 26ம் தேதி ராஜ்யசபா உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டனர். மத்திய அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீல் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து வரும் 15ம் தேதி ரேகாவும், 16ம் தேதி சச்சினும் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்கவிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+