நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்துவோம்-கர்நாடக அரசு
இதுகுறித்து சுரேஷ் குமார் தார்வாடில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஆட்சேபனைக்குரிய, விரும்பத்தகாத செயல்கள் நித்தியானந்தா ஆசிரமத்தில் நடந்து வருகிறது. இது வருத்தம் தருகிறது. எனவே ஆசிரமத்தை அரசே கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.
இதுதொடர்பான முடிவை முதல்வர் சதானந்த கெளடாவும், உள்துறை அமைச்சர் அசோக்கும் மேற்கொள்வார்கள் என்றார்.
ஆசிரமத்தைக் கைப்பற்றி அங்கு அரசு சார்பில் நிர்வாகியை நியமிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
ஆசிரமத்திற்கு அமைச்சர் விசிட்
இதற்கிடையே, கர்நாடக மாநில வனத்துறை அமைச்சரும் ராமநகர மாவட்ட பொறுப்பு அமைச்சருமான யோகேஷ்வர் பிடதி ஆசிரமத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். பி்ன்னர் ஆசிரம விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம ரெட்டி, எஸ்.பி. அனுபம் அகர்வால் ஆகியோருக்கு அவர உத்தரவி்ட்டார்.