தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி ஏமாற்றம் தருகிறது: பிரணாப் முகர்ஜி கவலை
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பது குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரணாப் பதிலளித்து கூறியதாவது:
ஏப்ரல் மாத உற்பத்தி வளர்ச்சி திருப்திகரமானதாக இல்லை. ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொழில்துறையை முன்னேற்றுவதற்குத் தேவையான முதலீடுகளை ஊக்கப்படுத்தவும், உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு முன் வந்துள்ளது. இந்தியாவில் வேளாண் துறையில் கவனம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியாவின் பொருளாதார நிலை முன்னேற்றத்தை சந்திக்கும் என்றார்.
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 0.1சதவீதம் அளவில் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருளில் தள்ளிவிட்டது என்கிறது பாரதிய ஜனதா கட்சி.