நிலமோசடிக்கு உடந்தை:அரசு அதிகாரியை கண்டித்து டிஜிட்டல் போர்டு-24ல் சாலை மறியல்
தூத்துக்குடி: எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு நிலமோசடிக்கு துணை போன இணை ஆணையரை கண்டித்து ஊராட்சிமன்ற தலைவர்கள் வைத்த டிஜிட்டல் போர்டை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா வெங்கடேசபுரம் பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி, ராமனூத்து பஞ்சாயத்து தலைவர் ராமசந்திரன், சித்தலங்கரை பஞ்சாயத்து தலைவர் சுப்புலெட்சுமி, கோவில்பட்டி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் மற்றும் பொது மக்கள் விவசாயிகள் நேற்று காலை எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்டனர். பின்னர் நிலமோசடி கும்பலுக்கு துணை போவதாகக் கூறி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கான நிலசீர்திருத்த இணை ஆணையர் பாலசுப்பிரமணியனை கண்டித்து வரும் 24ம் தேதி சாலை மறியல் நடத்தப் போவதாக டிஜிட்டில் போர்டு வைத்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
ஊராட்சி தலைவர்கள் வைத்த அந்த போர்டில் எட்டயபுரம் தாலுகா ராமனூத்து மஜராவில் உள்ள சர்வே எண் 5 நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு சுமார் 38 ஆண்டுகளாக அந்த நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு முதலில் 1995ம் ஆண்டு நில ஒப்படைப்பு பட்டா கொடுத்து பின்னர் 2005ம் ஆண்டு கண்ணி பட்டா கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட விவசாயிகளை மிரட்டி நிலமோசடி கும்பல் விதிமீறல் மூலம் சுமார் 80 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளது.
விவசாயிகளின் உச்சவரம்பு பட்டா விசாரணை என்கிற பெயரில் நிலமோசடி கும்பலுடன் சேர்ந்து இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் நிலங்களை அபகரிக்க முயற்சி செய்வதை கண்டித்து விவசாயிகளின் சார்பாக பொது மக்களின் ஆதரவோடு வரும் 24ம் தேதி எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருநத்து.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அந்த போர்டை உடனடியாக அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications