நிலம் ஆக்கிரமிப்பு: பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஈழ தமிழர்கள் போராட்டம்
இலங்கையில் ஈழத்தமிழர்களின் வீடுகள், நிலத்தை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஈழத்தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் அனைவரும் ராணுவத்தின் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு ராணுவத்தால் அபகரிக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியமர்த்தப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் உள்ள அந்நாட்டின் பாராளுமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் பேரவை தலைவர் திருகோதி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். பிரான்சில் தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆர்பாட்டத்தின் போது பேசிய திருச்சோதி, எமது மண் எமக்கு வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான இலாபம் முதல் அம்பாறை வரை நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கபட வேண்டும். அதை இலங்கை செய்யாத பட்சத்தில் தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் ஒவ்வொரு வாரமும் பிரான்சு பாராளுமன்றம் முன் நடைபெறும் என்று கூறினார்.
மேலும் பிரான்சு வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழீழ மக்களின் இன்றைய நிலையை கடிதம் மூலம் விளக்கி பிரான்ஸ் அரசாங்கம் ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications