மும்பையில் கொட்டித் தீர்த்த பருவமழை- போக்குவரத்து கடும் பாதிப்பு- மழை தொடரும் என எச்சரிக்கை
மும்பை: மும்பையில் வெளுத்துக் கட்டிய மழையால் இன்று இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மும்பையில் நேற்று இரவு முதல் காலை வரை மழை கொட்டித் தீர்த்தது. மும்பையின் சாண்டாகுரூஸ் பகுதியில் மிக அதிபட்சமாக 75 மிமீ மழையும் கொலாபாவில் 21 மிமீ மழையும் பதிவாகி இருந்தது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தன ரயில்கள் அனைத்தும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதாகவே சென்றடைந்தன.
கடந்த 10-ந் தேதியே எதிர்பார்க்கப்பட்ட மழை நேற்றுதான் கொட்டியது. இதனால் மும்பை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மும்பை மற்றும் கொங்கண் பகுதியில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில்...
கத்திரி வெயில் முடிந்த பிறகும் கூட சென்னை நகரம் 100டிகிரி வெப்பநிலையை எதிர்கொண்டே வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை நேரங்கள் இதமாக இருக்கின்றன. குளிர்ந்த காற்றும் சில நேரங்களில் மழைத் தூறலும் இருந்து வருகிறது. சென்னை நகரிலும் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மொத்தம் 4 மில்லி மீட்டர் மழை சென்னை நகரில் பதிவானது.
சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது
இதேபோல் தேனி, நீலகிரி, சேலம், கோவை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications