சங்மாவுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி. அரவிந்த் நேதம் சஸ்பெண்ட்
டெல்லி: குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. அரவிந்த் நேதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 19ம் தேதி நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவில் பழங்குடியினத் தலைவர் சங்மாவும் போட்டியிடுகின்றனர். பிரணாபும், சங்மாவும் நேற்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து சங்மா பேசினார்.
அப்போது சத்தீஸ்கர் மாநில மூத்த பழங்குடியினத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான அரவிந்த் நேதம் அவருடன் இருந்தார். மேலும் நேதம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய பழங்குடியின மன்றத்தின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சங்மா இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அம்மன்றம் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து சங்மாவுக்கு ஆதரவு கோரி வருகிறது. ஆனால் காங்கிரஸ் தான் எதுவும் கூறவில்லை என்றார்.
காங்கிரஸில் இருந்து கொண்டு சங்மாவை ஆதரித்து நேதம் பேசியதை டிவியில் பார்த்த காங்கிரஸ் கொதித்துவிட்டது. நாம் பிரணாபை வெற்றி பெறச் செய்ய பாடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர் எப்படி சங்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கடுப்பாகிவிட்டது. இதையடுத்து முதல் வேளையாக நேதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications