நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும்: விஜயகாந்த்
அரக்கோணம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சோளிங்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் நல்லதைச் செய்திருந்தால் நாங்கள் ஏன் கட்சி ஆரம்பிக்க வேண்டும்?. எங்களது மடியில் கனம் இல்லை. அதனால், வழியில் பயம் இல்லாமல் தமிழகத்தைச் சுற்றி வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. நெசவாளர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு ஆலைகளில் சரியான ஊதியம் தரப்படுவதில்லை. இவையெல்லாம் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும்.
மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் ஜனாதிபதி தேர்தலை தேமுதிக புறக்கணித்துள்ளது என்றார் விஜயகாந்த்.
பின்னர் திருத்தணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண் சுப்பிரமணியம், அந்தத் தொகுதியில் செய்து வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளுக்கு விஜய்காந்த் சென்றார்.
அங்கு விஜய்காந்த் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை, ஆளும் கட்சியினர் கொள்ளை அடித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை செய்து தருவதில்லை. மாநிலத்தில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. சட்டசபையில் எம்.எல்.ஏ. பேசினால், பாலபாடம் வேண்டாம் என்கின்றனர்.
தி.மு.க-அதிமுகவினர் மாறி மாறி கொள்ளை அடிப்பதால் தான், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு, இதுவரை இலவச சீருடை, காலணி வழங்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவதை விட, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கினால், குடும்பம் நன்றாக இருக்கும்.
முதல்வர்கள் பொதுவாக தலைமைச் செயலகத்தில் இருந்து தான் ஆட்சி செய்வார்கள். ஜெயலலிதாவோ, கொடநாட்டில் இருந்து ஆட்சி நடத்துகிறார்.
என்னை சிறையில் தள்ள, ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என, கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றனர். அது முடியாது. ஆளும் கட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications