ஒருவழியாக மின் தடை நேரத்தை கொஞ்சம் குறைச்சுட்டோம்: தமிழக மின்துறை அமைச்சர்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டின் ஒரு நாளில் அதிகபட்ச மின் பயனீட்டளவாக 248 மில்லியன் யூனிட் என்ற அளவை 24.07.2012 அன்றும் அதிகபட்ச மின் தேவையாக 11283 மெகாவாட்டை 26.06.2012 அன்றும் எட்டியுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் உற்பத்தியை அதிகப்படுத்தியும், மே மாதம் முதல் கிடைக்கும் காற்றாலை மின் உற்பத்தியை முழுவதும் பயன்படுத்தியும் மின் பயனீட்டாளர்களுக்கு இயன்ற அளவிற்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் அனைத்து புனல் மின் நிலையங்களுக்கான நீர் தேக்கங்களில் தண்ணீர் முற்றிலும் இல்லாததாலும், நிலையற்ற காற்றாலை மின் உற்பத்தின் காரணமாகவும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத பழுதின் காரணமாகவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தங்களாலும், தற்போதைய மின் நிலைமையை சமாளிப்பது பெரும் சவாலாகவே உள்ளது.
கடந்த ஐந்து தினங்களாக காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாகவும் மின்தடை நேரம் குறைக்கப்பட்டது. சில நாட்களில் முழுவதுமாக மின்தடை ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதி நீங்கலாக ஏனைய விவசாய மின் பயனீட்டாளர்களுக்கும் இயன்ற அளவிற்கு கூடுதல் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இம்மாநில அரசு, நடைமுறையிலுள்ள புதிய மின்திட்டங்களான வடசென்னை, வள்ளூர் கூட்டு முயற்சி அனல் மின் திட்டம் மற்றும் மேட்டூர் நிலை-3 ஆகிய மின் திட்டங்கள் மின் உற்பத்தியை தொடங்கும் போது தமிழகத்தின் மின் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications