கோவில்களை குறிவைத்து கொள்ளையடித்த பலே திருடன் கைது
தூத்துக்குடி: தண்டுபத்து முத்தாரம்மன் கோவிலில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்து முத்தாரம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி மாலை பூஜை முடிந்த பின் கோவில் பூசாரி குலசேகரப்பட்டிணத்தைச் சேர்ந்த சூரியன் கருவறையை பூட்டி ஜன்னல் வழியே கருவறைக்குள் சாவியை வைத்து விட்டு பக்கத்து கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் பூசாரியை விசாரித்துவிட்டு கருவறை சாவியை எடுத்து அம்மனுக்கு அனுவிக்கப்பட்டிருந்த பொட்டுதாலி, தாலிச்செயினை பறித்து சென்று விட்டார்.
இது குறித்து கோவில் தர்மகத்தா பால்சாமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சாத்தான்குளம் டி.எஸ்.பி. ராசபால் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரசலையன், ரவிமதி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிலில் திருடியது மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்யாநகரைச் சேர்ந்த சுயம்பு மகன் பெரியசாமி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், அவ்வப்போது கோவில்களில் நகைகளை திருடி விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஊர், ஊராகச் சென்று உல்லாசமாக இருப்பேன். பணம் குறையவும் வேறு கோவில்களை நோட்டமிட்டு சாமி கும்பிடுவது போல சென்று நகைகளை கொள்ளையடிப்பேன் என கூறியுள்ளார்.
அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குரும்பூர் புன்னையடி வனதிருப்பதி கோவிலில் கொள்ளையடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications