Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணுக்குள் வளர்ந்திருந்த 2 பற்கள்.. ஆந்திர பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

Nagabhushanam
சென்னை: பெண்ணின் கண்ணில் வளர்ந்திருந்த புற்று நோய்க் கட்டிக்குள் முழு அளவில் வளர்ந்த 2 பற்களும் இருந்ததைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நாகபூஷணம் என்ற 23 வயதுப் பெண்ணின் இடது கண்ணில் புற்றுநோய் கட்டி வளர்ந்திருந்தது. அதை நீக்குவதற்காக அவர் சென்னை அரசு கண் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்த புற்று நோய்க் கட்டி காரணமாக அவரது இடது கண் பார்வையும் பறிபோயிருந்தது.

அவரது கண்ணை மருத்துவர்கள் சோதனையிட்டபோது புற்று நோய்க் கட்டிக்குள் இரு பற்களும் இருந்தது தெரியவந்தது. இது மிக மிக அரிய நோயாகும். Orbital tetratoma எனப்படும் இந்த பிரச்சனையை பல மருத்துவர்கள் படத்தில் கூட பார்த்தது இல்லை.

இந் நிலையில் சென்னை மருக்குவமனையில் அவரது புற்று நோய்க் கட்டி அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதில் வளர்ந்திருந்த இரு பற்களும் அவரது கண் நரம்புகளை முழுமையாக சேதப்படுத்திவிட்டதால், இந்தக் கண்ணில் மீண்டும் பார்வை சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிறவிலேயே சிறிய கட்டியாக அவரது கண்ணில் புற்று நோய் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாளாக நாளாக அது வளர்ந்துள்ளது. மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நாகபூஷணத்தின் பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல் விட்டதால் கட்டி பெரிதாகி, மிக அரிதாக ஏற்படும் கட்டிக்குள் பல் முளைப்பதும் நடந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+