கண்ணுக்குள் வளர்ந்திருந்த 2 பற்கள்.. ஆந்திர பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நாகபூஷணம் என்ற 23 வயதுப் பெண்ணின் இடது கண்ணில் புற்றுநோய் கட்டி வளர்ந்திருந்தது. அதை நீக்குவதற்காக அவர் சென்னை அரசு கண் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
இந்த புற்று நோய்க் கட்டி காரணமாக அவரது இடது கண் பார்வையும் பறிபோயிருந்தது.
அவரது கண்ணை மருத்துவர்கள் சோதனையிட்டபோது புற்று நோய்க் கட்டிக்குள் இரு பற்களும் இருந்தது தெரியவந்தது. இது மிக மிக அரிய நோயாகும். Orbital tetratoma எனப்படும் இந்த பிரச்சனையை பல மருத்துவர்கள் படத்தில் கூட பார்த்தது இல்லை.
இந் நிலையில் சென்னை மருக்குவமனையில் அவரது புற்று நோய்க் கட்டி அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதில் வளர்ந்திருந்த இரு பற்களும் அவரது கண் நரம்புகளை முழுமையாக சேதப்படுத்திவிட்டதால், இந்தக் கண்ணில் மீண்டும் பார்வை சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிறவிலேயே சிறிய கட்டியாக அவரது கண்ணில் புற்று நோய் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாளாக நாளாக அது வளர்ந்துள்ளது. மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நாகபூஷணத்தின் பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல் விட்டதால் கட்டி பெரிதாகி, மிக அரிதாக ஏற்படும் கட்டிக்குள் பல் முளைப்பதும் நடந்துள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications