காவிரியில் தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்கக் கோரி தமிழகத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம்
திருச்சி: காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொது செயலாளருமான பெ.மணியரசன் கூறியதாவது,
கர்நாடகாவில் தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 116 டிஎம்சியில் 100 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால் அங்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு பொய் சொல்லி வருகிறது.
காவிரி நதியில் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெறுவதற்காக மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல், மக்கள் விடுதலை), சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், சின்னச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கங்கள், தமிழக உழவர் முன்னணி, கொள்ளிடம் விவசாயிகள் சங்கம், தாளாண்மை உழவர் இயக்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை கொண்ட காவிரி உரிமை மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து வரும் 30ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் இன்று முதல் துவங்குகிறது என்றார்.
திருவாரூர்:
காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய பல்வேறு சங்கங்களை சேர்ந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர், தினமும் தமிழகத்துக்கு 2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.40 மணிக்கு கூடிய காவிரி உரிமை மீட்பு குழுவினர், நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் இன்று காலை குபேரன் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணியினர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications