தமிழகத்தில் மத்தியக் குழு: 4 நாட்களில் காவிரி நீர் தேவை குறித்து அறிக்கை
சென்னை: காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தினமும் 9,000 கன அடி நீரைத் தர கர்நாடகம் மறுத்தது. இதையடுத்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
கர்நாடகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீற முடியாமல் கடைசியில் கடந்த 30ம் தேதி முதல் கர்நாடக அரசு காவிரியில் தினமும் 9,000 கன அடி நீரை திறந்து விட்டு வருகிறது.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களிலும் அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, சாகுபடி பயிர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது.
மத்திய நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் துரு விஜய் சிங் (டி.வி.சிங்) தலைமையிலான ஒரு குழு நேற்று சென்னை வந்தது. இதில் மத்திய நீர் ஆணையத்தின் தலைமை பொறியாளர்கள் ஏ.மகேந்திரன், ஆர்.கே.குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவினர் சென்னை கோட்டையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார், பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் சிவசங்கரன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தமிழக அதிகாரிகள், இங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு, அணைகளுக்கு வரும் தண்ணீர், அணையில் இருந்து வெளியேறும் நீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் நிலைமை குறித்து ஆதாரத்துடன் விளக்கினர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய நீர்ப்பாசன அமைச்சக செயலாளர் துரு விஜய்,
தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு, அணைக்கு வரும் நீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பயிர்களின் நிலைமை போன்றவை குறித்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்வது எங்கள் பணி அல்ல. அதற்கு தனியாக மத்திய குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். நாங்கள் உடனே கர்நாடகா சென்று அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அவர்கள் தரப்பு கருத்துகளை கேட்போம். எங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் 4 நாட்களில் சமர்ப்பிப்போம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications