'பிரா'வில் ஒளித்து வைத்திருந்த கத்தியால் குத்தி பெண் கொலை!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில், தன்னைப் பார்த்து கிண்டலாக சிரித்த பெண்ணை தனது பிராவில் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் குத்திக் கொலை செய்தார் ஒரு பெண். அப்பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஆல்வன் ஜோன்ஸ். 24 வயதாகிறது. இவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எம்மா ஜோன்ஸ், 31 வயது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவ தினத்தன்று இரவு ஒரு பார்ட்டி நடந்தது. அதில் எம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஒரு வாதம் மூண்டது. அப்போது ஆல்வனைப் பார்த்து எம்மா கேலியாக சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்தார் ஆல்வன். இதையடுத்து அவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர்.

பின்னர் எம்மா அருகில் இருந்த தனது வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். ஆனால் ஆத்திரம் தணியாத ஆல்வன் தனது வீட்டு கிச்சனுக்குப் போனார். அங்கு கத்தி ஒன்றை எடுத்து தனது பிராவுக்குள் மறைத்துக் கொண்டார். பின்னர் எம்மா வீட்டுக்குப் போனார்.

வெளியே நின்று கொண்டு தைரியம் இருந்தால் இப்போது வெளியே வா எம்மா என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு எம்மா வெளியே வந்தார். அப்போது கோபத்துடன் நின்றிருந்த ஆல்வனைப் பார்த்து மறுபடியும் அவர் கேலியாக சிரித்தார். இதைப் பார்த்து மேலும் கோபமடைந்த ஆல்வன், பிராவுக்குள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்மாவை சரமாரியாக நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயமடைந்த எம்மா ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார்.

அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு எம்மா உயிரிழந்தார். இதையடுத்து ஆல்வன் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் தனது குற்றத்தை ஆல்வன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 18 மாதசிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+