ஆயுதள் தண்டனை கைதிகள் 14 அல்லது 20 ஆண்டுகளில் விடுக்க உச்சநீதிமன்றம் எதிர்ப்பு
இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சிறையில் 14 அல்லது 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டால் அவர் தன்னை விடுதலை செய்ய கோருவதற்கு உரிமை உள்ளது என்று நினைப்பதாக தெரிகிறது. ஆனால், அப்படி உரிமை எதுவும் இல்லை.ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர், அவருக்கு அரசாங்கம் ஏதாவது தண்டனை குறைப்பு அளித்தால் அன்றி, அவர் தனது ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் பண்டிகைகள் அல்லது ஏதாவது ஒருநாளில் அரசுகள் கைதிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்வதை அனுமதிக்க முடியாது என்பதுதான் எங்களது கருத்து. அரசுகள், தண்டனை குறைப்பு அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லலாம். அதேபோல், தண்டனையை குறைக்கும்படி கேட்க உரிமை இல்லை என்று தடுக்க முடியாது என்று கைதிகளும் சொல்லலாம். ஆயுள் தண்டனை கைதியின் சிறை காலத்தை 14 ஆண்டுகளுக்கும் கீழ் அரசுகள் குறைக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.