For Quick Alerts
For Daily Alerts
Just In
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்த கொள்கைகள் தொடரும்: மன்மோகன்சிங்
டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கில் பேசிய மன்மோகன்சிங், எதிர்மறையான சிந்தனைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கிறது.
அண்மையில் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஒரு தொடக்கம்தான். இன்னமும் ஏராளமான சீர்திருத்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. சீர்திருத்தங்களை எதிர்க்கக் கூடியவர்கள் பழமைவாதிகளகாவே இருக்கின்றனர்.
சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நமது நாட்டையும் பாதித்திருக்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் 5 முதல் 6% இருக்கிறது. இதனைக் குறைத்தாக வேண்டிய நிலை இருக்கிறது.
அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் நடைமுறைகள் இன்னமும் விரைவு படுத்தப்படும் என்றார் அவர்.
Comments
English summary
Amid global slowdown impacting India as well, Prime Minister Manmohan Singh on Saturday said the government is committed to do everything to put economy back on a high growth path of 8-9 per cent.
Story first published: Saturday, December 15, 2012, 13:02 [IST]