அண்ணாநகர் வால்மார்ட் ஆபீஸ் முற்றுகை: போலீஸ் தடியடி- சிபிஎம், சிபிஐ தலைவர்கள் உள்பட 1,000 பேர் கைது
சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள வால்மார்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன், எம்.எல்.ஏ.க்.கள் சவுந்தர்ராஜன், பீமாராவ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 1,000க்கும் மேற்பட்டோர் அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் கூடினர்.
அங்கிருந்து ஊர்வலமாகக் கிளம்பிய அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு வி்ட்டு ஊர்வலத்தை தொடர்ந்தனர். வால்மார்ட் கிளை அலுவலகத்தை அடைந்ததும் அதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தின் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்களோ அடியை வாங்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து வால்மார்டுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்ப மறுத்ததும் மேற்கு மண்டல இணை கமிஷனர் சக்திவேல், அண்ணாநகர் துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், வில்லிவாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அப்படியும் அங்கிருந்து கலைந்து போவதாக இல்லை. இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டு திருமங்கலத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications