பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி 3 கட்ட நடைபயணம்: வைகோ அறிவிப்பு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 12ந் தேதி நெல்லை மாவட்டம் உவரியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார்.
மொத்தம் 14 நாட்கள் 450 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட வைகோ வழியில் 510 கிராமங்களில் மதுவினால் ஏற்படும் தீமையையும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம் மதுரை மேலமாசிவீதிதெற்கு மாசிவீதி சந்திப்பில் நேற்று இரவு நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
மதுவின் பிடியில் இளைய சமுதாயம் சிக்கி விழுந்து விடக்கூடாது, ஒழுக்க சிதைவுகளுக்கு இளைஞர்கள் ஆளாகக்கூடாது, தமிழர் சமுதாயத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடைபயணம் நடந்தது.
1971ம் ஆண்டு ராஜாஜி, கோபாலபுரத்திற்கு நேரில் சென்று அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து மதுவை திணிக்காதீர்கள், அந்த திட்டத்தை உடனே கைவிடுங்கள் என்றார். ஆனால் கருணாநிதி மறுத்து விட்டார். அப்போது வந்த மது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழகத்தில் 26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் மதுவினால் வருகிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மதுவினால் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடி மேல் வருமானம் வருகிறது. வாரத்திற்கு 500 புதியவர்கள் மது குடிக்க வருகிறார்கள் என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறார். அரசு திட்டங்கள் செயல்படுத்த அதிக பணம் செலவாகிறது என்கிறார்கள்.
மக்களை வாட்டி வதைக்கும் அரசு திட்டங்கள் எதற்கு? குஜராத் மாநிலத்தில் மதுக்கு அனுமதி இல்லை. அங்கு தொழில் பெருகவில்லையா, பொருளாதாரம் பெருகவில்லையா. காமராஜர் காலத்தில் மது இல்லை. ராஜாஜி காலத்தில் மது இல்லை.
மது இருந்தால் இனி பெண்கள் தெருவில் போக முடியாது. உலகில் அதிக விபத்து எங்கு நடைபெறுகிறது தெரியுமா? தமிழ்நாட்டில் தான். இதற்கு காரணம் மிதமிஞ்சிய மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால்தான். கர்ணன் வேண்டுமானால் கவசத்தை கழற்றி கொடுக்க முடியும். ஆனால் என்னால் நேர்மை என்ற கவசத்தை கொடுக்க முடியாது. இளைய தமிழர்கள் பாழாகி விடக்கூடாது. சின்ன பிஞ்சுகள் வாடிவிடக் கூடாது என்றுதான் இந்த நடைபயணம்.
இந்த பயணம் இதோடு முடியவில்லை. மீண்டும் பிப்ரவரி 18ந் தேதி தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் தொடங்கி, 28ந் தேதி மறைமலைநகரில் முடிவடையும். அதே போன்று ஏப்ரல் 9ந் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி 20ந் தேதி ஈரோட்டில் நிறைவடையும். அதனை அடுத்து ஜூன் மாதம் 20-ந் தேதி விழுப்புரத்தில் தொடங்கி 30ந் தேதி கடலூரில் நிறைவடையும் இவ்வாறு வைகோ பேசியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications