நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம்- தமிழ்நாடு எதிர்ப்பு- கர்நாடகா ஆதரவு
டெல்லி: மாநிலங்களிடையே ஓடும் நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நீர் வள கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பங்கேற்று பேசுகையில், நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தேசிய நீர் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த யோசனையை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. நதி நீர்ப் பிரச்னைகளை விசாரித்து தீர்வுகாண ஏற்கெனவே தீர்ப்பாயங்கள் உள்ளன. இந்த நிலையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைப்பது நடைமுறைக்கு பொருந்தாது; உரிய பலனை கொடுக்காது.
தமிழ்நாட்டின் 80 சதவீத நீர் வளம் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையை நம்பியே உள்ளது. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசின் வரைவு தேசிய நீர் கொள்கை உள்ளது.
மாநிலங்களிடையே ஓடும் நதி நீரைப் பங்கிடுவதில் நிலவும் பிரச்னையால் தாழ்வான மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது. அதற்கு தகுந்தவாறு தேசிய நீர்க் கொள்கை மாற்றப்பட வேண்டும்.
தேசிய அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளை நீக்க வேண்டும். மாநிலங்களிடையிலான நதி நீர்த் திட்டங்களில் இடம்பெற்றுள்ள நதி நீர்ப் பகிர்வு உடன்படிக்கைகள், நடுவர்மன்ற தீர்ப்புகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும்.
தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கக்கூடாது: தண்ணீரை வர்த்தக பொருளாக கருதி அதற்கு விலை நிர்ணயிப்பதா வேண்டாமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்தால் மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாக கருதப்படும். தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை சமூகத்தில் அமைதியை கெடுக்கும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், நதி நீர் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications