அட்டாக் பாண்டியை ‘அட்டாக்’ செய்ய தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள போலீஸ்

மதுரையில் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கடந்த 31ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதில் தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், நாகமுருகன் உள்பட 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நந்தம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் அட்டாக் பாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவருடன் 5 பேர் கொண்ட நெல்லையை சேர்ந்த கூலிப்படையினரும் பதுங்கி உள்ளதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷ்க்கும் தொழில் போட்டி உள்பட பல்வேறு விவகாரங்களில் மோதல் இருந்ததாகவும் இதனால் ஒருவரை ஒருவர் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்காக பொட்டு சுரேஷ் ஒரு கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் வழங்க முன் வந்ததாகவும், அதே கூலிப்படையினருக்கு ரூ.25 லட்சம் வழங்கி அட்டாக் பாண்டி முந்திக் கொண்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நெல்லை, தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் முகாமிட்டு அவரை உள்ளூர் போலீசார் உதவியுடன் பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். 19 வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டியை பிடிக்க முயலும் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவரையும், அவருடன் உள்ள கூலிப்படையினரையும் சுட்டு பிடிக்க போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications