இந்தியாவில் 2 மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 கோடி மோசடி: 5 வங்கிகள் பாதிப்பு
மும்பை: கடந்த 2 மாதங்களில் இந்தியா முழுவதும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.30 கோடி மோசடி நடந்துள்ளது.
இந்தியாவில் கிரெட்டி கார்டு மோசடி சில காலமாக நடந்து வரும் நிலையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் அதிக அளவில் மோசடி நடந்துள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகள் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, சிட்டி பாங்க், எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
மோசடி ஆட்கள் கிரெடிட் கார்டு விவரங்களை டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மூலம் தான் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. விவரங்கள் கிடைத்தவுடன் அதை வைத்து பண பரிமாற்றம் செய்வது, பணம் செலவு செய்வது, போலி கார்டு தயாரிப்பது உள்ளிட்டவை நடப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிரெட்டி கார்டு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே அதை பயன்படுத்தினால் அப்போது அதன் விவரத்தை பெற்று போலி கார்டுகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் தற்போது வெளிநாடுகளுக்கு போகாதவர்கள் மற்றும் ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யாதவர்களின் கார்டுகளும் கூட போலியாக தயாரிக்கப்படும் சம்பவங்கள் நடப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் அந்த பணத்தை திருப்பித் தரத் தேவையில்லை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச கும்பல் தான் இந்தியாவில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications