நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்: ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளையொட்டி, இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணமக்களுக்கு 65 வகையான சீர்வரிசை பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். திருமணத்தை நடத்தி வைத்த பின், முதல்வர் ஜெயலலிதா மண மக்களை,, அன்பும், அறனும், நல்ல செயலும் இருந்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சி தரும் என்று வாழ்த்திப் பேசினார்
தமிழக அரசுக்கு சாதகமான மத்திய அரசு
வாழ்த்துரைக்குப் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவுக்கு ஆதரவாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் செயல்படுகின்றன. காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை. கேபிள் டிவி டிஜிட்டல்மயமாக்குவதிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. எனவே தமிழக மக்களின் குறைகளை கேட்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றும், அதை நிறைவேற்றுவதே தமது குறிக்கோள்.
செல்வாக்கு இல்லாத கட்சிகள்
தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. எனவே அதிமுகவினர் சிறப்பாக பணியாற்றி, வரும் மக்களவைத் தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், அதிமுகவே வெற்றி பெற்று வாகை சூட பாடுபட வேண்டும். இதன் மூலம், தமிழக அரசுக்கு நன்மை அளிக்கும் ஒரு அரசை மத்தியில் கொண்டு வர முடியும் என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications