மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
பொள்ளாச்சி: கல்லூரி மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்கக் கூடாது என்று கோவை மாவட்ட எஸ்.பி. உமா கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த குற்றத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது எஸ்.பி. உமா கூறுகையில்,
இணையதள மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களிடம் அடையா அட்டையை கேட்டுப் பெற வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின் வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் வாடிக்கையாளர்களின் செல் போன் எண்கள் மற்றும் முகவரிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அனைத்து இணையதள மையங்கள் மற்றும் செல்போன் விற்பனை மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும். அங்குள்ள தடுப்பறைகள் வெளியில் இருந்து ஆட்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளை இணையதள மையங்களுக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் உடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். அதுவும் திறந்த வெளியில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை பார்க்காத வகையில் சாப்ட்வேர்களை பொருத்த வேண்டும். இணையதள மையங்களில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆபாச படங்களை பதிவு செய்வது குற்ற நடவடிக்கையாகும். ஆபாச படங்களை பதிவு செய்து கொடுப்பவரும் குற்றவாளிதான். எனவே இவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.
செல்போன் கடைகளில் புதிதாக சிம் கார்டு கேட்டு வருபவர்களிடம் நிலையான இருப்பிட முகவரி, தொலை பேசி எண் உள்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற வேண்டும் என்று பல்வேறு யோசனைகளை அவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications