நடப்பாண்டிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும்: பார்லி.யில் பிரணாப்!

பார்லிமென்ட்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் சில..
நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் தமது மின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. மேலும் 17 நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
விமான துறையை மேம்படுத்துவதற்காக புதிய விமான நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கின்றன. நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 2600 கி. மீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை நாட்டுக்கு பொருளாதர ரீதியாக கடினமாக ஆண்டாகத்தான் இருந்தது. வளரும் நாடுகளில் இன்னமும் பொருளாதர மீட்சி என்பது மந்தமானதாகவே இருக்கிறது. நமது நாட்டில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் மகளிர் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அமல்படுத்தப்பட்டிருக்கும் கிராமவேலை திட்டம் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டமானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் ஊழலைக் குறைக்க முடியும்.
கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்படும். கிராமப் புறங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசு திட்டம் மூலம் புதிதாக 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக 2 போலியோ நோய் தாக்குதல் இல்லை. 10 லட்சம் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் கைத்தறி துறையில் புதிய சலுகைகள் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணை, இயற்கை எரிவாயுக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நமது நாடு ஜனநாயக முறைகளில் உயர்ந்து நிற்கிறது.
மதச்சார்பற்ற நடவடிக்ககைள் நமது பெரும் சாதனையாகும். தாகூர் விருது என்ற பெயரில் புதிய சர்வதேச விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் ஆண்டு விருது பண்டிட் ரவிசங்கருக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications