விடாது கறுப்பு... தூசு தட்டப்படும் திமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான சொத்து குவிப்பு வழக்கு
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 6 ஆண்டுகால தாமதத்துக்குப் பிறகு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.
தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சொத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்ய அனுமதி பெற்றிருக்கிறது.
துரைமுருகன்
வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், 1996-2001ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.94 கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து 23.2.07 அன்று வேலூர் தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அப்போது மேல்முறையீடு செய்வதற்கு அரசின் அனுமதி கேட்டோம். ஆனால் மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு அல்ல என்று அப்போதைய அரசு கூறிவிட்டது. தற்போது அரசின் ஒப்புதல் பெற்றுள்ளோம். மேல்முறையீடு செய்ய 1,784 நாட்கள் காலதாமதம் ஆனதை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்க கோரப்பட்டது.
வீரபாண்டி ஆறுமுகம்
இதுபோல் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், 1996-01-ம் ஆண்டுகளில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தலைமை மாஜிஸ்திரேட்டு விடுவித்து 6.11.06 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1,896 நாட்கள் காலதாமதம் ஆனதை மன்னித்து மேல்முறையீட்டு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், 1996-01 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.21.22 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடலூர் தலைமை மாஜிஸ்திரேட்டு விடுவித்து 22.7.07 அன்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1,752 நாட்கள் காலதாமதம் ஆனதால் அதை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மூன்று மனுக்களையும் ஏற்றுக்கொண்டு, காலதாமதத்தை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications