தூத்துக்குடி மீனவர்களை விடுவித்த கையோடு ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 652 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சூசை அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான படகில் ரெய்மன், முத்து, முருகானந்தம், தாசன், பிலிப் ஆகியோரும், சேவியருக்கு சொந்தமான படகில் சுடலை, அந்தோணி, இன்னாசி, லேடன், தவிதம் ஆகியோரும், ராசுவுக்கு சொந்தமான படகில் சுமன், ஆரோக்கியசாமி, முனியசாமி, கெபிசன் ஆகியோரும் பூண்டி என்பவரின் படகில் சுரேஷ், ராபின், முருகன், கேவி ஆகியோரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கடற்படையினர் அங்கு வந்து அந்த 4 படகுகளையும் சுற்றி வளைத்தனர். அவர்கள் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி 19 பேரையும் படகுகளோடு சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவரம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ராமேஸ்வரம் மீன்துறைக்கு தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் தான் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications