3 குழந்தைகளின் தாய்… குடும்பத்தைக் காக்க சுமை தூக்கும் சோகம்

வடமேற்கு ரயில்வேயில் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்தவர் மகாதேவ். இவருக்கு மஞ்சு தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மகாதேவ் உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்துவிட்டார். கணவரின் இறப்புக்குப் பின்னர் பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியாமல் விழித்திருக்கிறார் மஞ்சு.
கணவர் பார்த்த போர்ட்டர் வேலையை தான் பார்க்கலாம் என்ற தோன்றவே, அதிகாரிகளைப் போய் பார்த்திருக்கிறார். தனது நிலைமையை சொல்லி கணவன் பார்த்த வேலையை தனக்கு கொடுக்கும்படி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார் மஞ்சு தேவி.
ராஜஸ்தானின் ஒரே பெண் போர்ட்டர் என்பதால் பிரபலமாகி வருகிறார் மஞ்சு தேவி. ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளும் பெண் போர்ட்டரை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்துப் போய், அதன்பிறகு அவரிடம் தங்கள் பைகளை தூக்கிக் கொண்டு வரும் வேலையைத் தருகிறார்கள்.
இந்த பணி பற்றி கூறும் மஞ்சு தேவி, கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு படிப்பறிவு கிடையாது. அதனால் கணவன் செய்த போர்ட்டர் வேலையை செய்ய முடிவு செய்தேன். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் எனக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. கணவரின் நண்பர்கள்தான் அந்த யோசனையை சொன்னார்கள். அவர்களே அதற்கு ஏற்பாடும் செய்தார்கள் என்றார்.
3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்த ரயில்வே அதிகாரிகளும் எனது கணவனின் போர்ட்டர் லைசன்ஸை எனக்கு கொடுத்தார்கள். இந்த தொழிலில் ஆண்கள்தான் அதிகம். நான் ஒருத்திதான் பெண். இருந்தாலும் சக போர்ட்டர்கள் உதவியால் வேலை கஷ்டம் தெரியவில்லை எனக் கூறுகிறார் மஞ்சு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications