திண்டுக்கல்லில் வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளியில் தீ விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதட்டம் நிலவியது. பின் குளிர்சாதனத மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு தான் காரணம் என கண்டறியப்பட்ட பிறகு அமைதி திரும்பியது.
திண்டுக்கல் நீதிமன்றம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்திற்கு நேற்று மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் பள்ளிக் கூடத்தில் குண்டு வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலை யத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளிராஜா, இன்ஸ் பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு மோப்பநாய் வர வழைக்கப்பட்டு பள்ளிக்கூட வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பள்ளிக்கூட வளாகம் முழுவதும் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்பட வில்லை.
வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி என்று தெரியவரவே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே பள்ளிக் கூடத்தில் உள்ள கணினி அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அங்கு சென்று பார்த்த போது குளிர்சாதனை இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்க ஆரம்பித்தது தெரிய வந்தது. உடனடியாக சென்று மின்சார இணைப்பை துண்டித்தனர்.
ஆனால், அதற்குள் தீ மழமழவென பரவி, கணினிகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் புருசோத்தமன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த கணினி அறையில் மொத்தம் 25 கணினிகள் இருந்தன. அதில் 5க்கும் மேற்பட்ட கணினிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
ஏற்கனவே வெடிகுண்டு புரளியை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி கொண்டு இருந்தபோது, கணினி அறையில் தீப்பிடித்ததால் போலீசார் பதற்றம் அடைந்தனர். குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததை தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே பள்ளிக் கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண்ணை ஆய்வு செய்ததில் அம்மையநாயக்கனூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் பெயரில் சிம்கார்டு வாங்கி இருப்பது தெரியவந்தது.
மேலும் செல்போன் செயல்பாட்டை வைத்து பார்த்த போது திண்டுக்கல் ஆர்.வி.நகரில் இருந்து பேசியதும் தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications