For Daily Alerts
Just In
ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு எதிராக போராட்டம்… உருவபொம்மை எரிக்க முயன்ற பாமகவினர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களைப் பற்றி கவலையில்லை என்று கூறி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவாக பேட்டியளித்தவர்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரிக்க முயன்ற பாமகவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற பந்த் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிர்வாகிகள் நேற்று மாலை தொழிற்சாலையின் ஒப்பந்தக்காரர் தியாகராஜன் மகளிர் தொண்டு நிறுவனங்களின் சார்பில் ஆலைக்கு ஆதரவான பேட்டியை நிருபர்களுக்கு அளித்தனர். எங்களை பொறுத்தவரை தொழிற்சாலையின் 2ஆயிரம் பணியாளர்கள் தான் முக்கியம், 2லட்சம் மக்களை பற்றி கவலை இல்லை என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
Comments
English summary
PMK cadres were arrested in Tuticorin after they protested against Sterlite industries.