Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கள வெறியர்கள் மீண்டும் தாக்குதல் - 8 தமிழக மீனவர்கள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: சிங்களக் கடற்படையினர் மீ்ண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தாக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டனம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (30), மாரியப்பன் (28), விஜயகுமார் (30), சவுந்தரராஜன் (45) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் ஒரு பைபர் படகில் கோடியக்கரைக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை சுற்றிவளைத்து 4 பேரையும் கயிறு மற்றும் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் படகில் இருந்த திசைகாட்டும் கருவி, செல்போன், கயிறு, மீன்பிடி வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். காயமடைந்த 4 பேரும் வெள்ளப்பள்ளம் வந்து சேர்ந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 4 பேர் மீது தாக்குதல்

இதேபோல நாகப்பட்டினத்தை அடுத்த வனவன்மகாதேவி பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை அங்குவந்த இலங்கை கடற்படையினர் கட்டைகளால் தாக்கினர். படகில் இருந்த மீன்களை அள்ளி கடலுக்குள் வீசினர்.

நேற்று பிற்பகல் அந்த 4 பேரும் கரைக்கு திரும்பினர். அவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+