சிங்கள வெறியர்கள் மீண்டும் தாக்குதல் - 8 தமிழக மீனவர்கள் படுகாயம்
நாகப்பட்டனம்: சிங்களக் கடற்படையினர் மீ்ண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தாக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டனம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (30), மாரியப்பன் (28), விஜயகுமார் (30), சவுந்தரராஜன் (45) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் ஒரு பைபர் படகில் கோடியக்கரைக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை சுற்றிவளைத்து 4 பேரையும் கயிறு மற்றும் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் படகில் இருந்த திசைகாட்டும் கருவி, செல்போன், கயிறு, மீன்பிடி வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். காயமடைந்த 4 பேரும் வெள்ளப்பள்ளம் வந்து சேர்ந்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 4 பேர் மீது தாக்குதல்
இதேபோல நாகப்பட்டினத்தை அடுத்த வனவன்மகாதேவி பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை அங்குவந்த இலங்கை கடற்படையினர் கட்டைகளால் தாக்கினர். படகில் இருந்த மீன்களை அள்ளி கடலுக்குள் வீசினர்.
நேற்று பிற்பகல் அந்த 4 பேரும் கரைக்கு திரும்பினர். அவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications