நெல்லையில் அரசு பேருந்து ஏறி, இறங்கிய பிறகு உயிர் தப்பிய வாலிபர்
நெல்லை: நெல்லையில் வாகன நெருக்கடியால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பைக்குடன் பேருந்துக்கு அடியில் சிக்கிய வாலிபர் உயிர் தப்பினார்.
நெல்லை டவுனில் இருந்து பாளையங்கோட்டை செல்வதற்காக வாகன ஓட்டிகள் ஒரே சாலையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஜங்ஷன், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், பாளை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் பேருந்து, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டில் வண்ணார்பேட்டையில் தெற்கு, வடக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதிக போ்க்குவரத்து இருப்பதால் நெருக்கடி குறையவில்லை. மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாளை ஊசி கோபுரம் அருகே பைக்கில் வந்த இன்ஜினியர் உள்பட 2 பேர் அரசு பேருந்து மோதி இறந்தனர். அதே போல் நேற்று வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சந்திப்பில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்த மணப்பாட்டை சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. பைக் மீது பேருந்து ஏறி, இறங்கியது. பிரபாகரன் லேசான காயத்துடன அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சர்வீஸ் ரோடு அமைத்தால் தான் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications