நிலக்கரி சுரங்க ஊழல்- சட்ட அமைச்சர் ராஜினாமா இல்லை: மன்மோகன்சிங் திட்டவட்டம்!!

பின்னணி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடால் மத்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது கணக்கு தணிக்கை துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் அதில் திருத்தங்கள் மேற்கொண்டார் என்பது எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்தது. இதை முதலில் மத்திய அரசு மறுத்தது வந்தது. ஆனால் நேற்று சிபிஐ இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மத்திய சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கை பகிரப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.
பிரதமர் மறுப்பு
இதனால் பிரதமர் மன்மோகன்சிங், சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று, ஒருபோதும் சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ராஜினாமா செய்ய மாட்டார். நிலக்கரி ஊழல் வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. நமது நாட்டின் நாடாளுமன்றம் முடங்கிக் கிடப்பது பற்றி உலக நாடுகள் சிரிக்கின்றன என்றார் அவர்.
அதிரடி சோதனை
இதனிடையே நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு பெற்றதாக 11 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சஞ்சய் ஜெயின் சகோதரர்களுக்கு சொந்தமான புஷ்ப் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த நிறுவனங்களில் சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி, அரியானா மற்றும் ராயப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications