வைகோவின் நடைபயணத்தில் ''கிராஸ்' செய்த பாம்பு! லாவகமாக பிடித்த 'தமிழ்நாட்டு புருஸ்லி'!
பொள்ளாச்சி: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போது ஐந்தரைடி நீள பச்சைப் பாம்பு 'கிராஸ்' செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதை லாவகமாக பிடித்த மதிமுக மாணவர் அணியின் நந்தனை 'தமிழ்நாட்டின் புருஸ்லி' என்று வைகோ பாராட்டினார்.
பூரண மதுவிலக்கு கோரி 3ம் கட்டமாக கடந்த 16-ந் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைபயணத்தில் 11ம் நாளான நேற்று காலை 7.00 மணியளவில் சென்னிமலையில் தொடங்கியவர்கள் நண்பகலில் வெள்ளோட்டில் மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வுக்குப் பின் 4.00 மணியளவில் வெள்ளோட்டில் இருந்து புறப்பட்டனர். புதுவலசு என்ற கிராமத்தில் மாலை 6.30 மணியளவில் வரும்போது நடைபயணத்திற்கு முன்பாக ஐந்தரை அடி நீளமுள்ள பச்சைப்பாம்பு குறுக்கே சென்றது.

ப்போது மாணவர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் உடனை அந்தப் பாம்பை பிடித்து அதன் வாயை பிடித்தவுடன் சுழன்றது. உடனே அருகில் இருந்து கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அதன் கழுத்துப்பகுதியைப் பிடித்து அரை கி.மீ. தூரம் நடந்து வந்தார். பின்னர் சிறிய பசுமையான காட்டுப்பகுதியை அடைந்தவுடன் வைகோ, ஒரு உயிரைக் கொல்வது சரியல்ல என்று கூறி காட்டுக்குள் விடச் சொன்னார். மல்லை சத்யாவும் காட்டிற்குள் அந்த பாம்பை விட்டுவிட்டார்.
பாம்பைப் பிடித்த மாணவர் அணியைச் சேர்ந்த நந்தனை வைகோ "தமிழ்நாட்டின் புருஸ்லி " என்று கூறி பாராட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications