நிதாகத் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சவூதி அரசிடம் இந்தியக் குழு வலியுறுத்தல்
ரியாத்: சவூதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அதிக அளவில் வேலை இழக்க நேரிடும், எனவே, அந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் (நிதாகத் சட்டம்) விளைவாக இந்தியர்கள் அதிக அளவில் வேலை இழக்கும் வேதனையான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிதாகத் சட்டத்தின்படி, சவூதியில் உள்ள நிறுவனங்கள் 10 வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், உள்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இந்த புதிய சட்டம் காரணமாக ஏற்கெனவே அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்.
இவ்விஷயமாக, வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி தலைமையிலான குழுவினர் சவூதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அகமது மற்றும் பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அடல் ஃபகீயை சந்தித்துப் பேசினர். அப்போது, புதிய தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அதிக அளவில் வேலை இழக்க நேரிடும் என்றும், அந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சவூதியில் 20 லட்சம் இந்தியர்கள் உள்பட 90 லட்சம் வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் சுமார் 2 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications