பன்சால் நீக்கம் ஏன்? சில பின்னணி தகவல்கள்!

அவருடன் மேலும் சிலரும் கைதானார்கள். இதனால் பன்சால் பதவி விலக வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கின. ஆனால், விஜய் சிங்லாவுடன் தனக்கு தொழில் ரீதியிலான தொடர்பு எதுவும் கிடையாது என்று பன்சால் திட்டவட்டமாக மறுத்தார்.
ஆனால் பேரம் பேசப்பட்ட லஞ்சப் பணம் ரூ. 10 கோடியில் முன்தொகையாக ரூ. 90 லட்சம் தர உடன்பாடு ஏற்பட்டதாக மகேஷ் குமார் அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில், மகேஷ் குமாரின் நண்பரான, ரயில்வே ஐ.ஜி-க்கு தொடர்பு இருப்பதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்தான் சிங்லாவிடம் வழங்குவதற்காக மகேஷ் குமார் வைத்திருந்த தொகை அடங்கிய பெட்டியைப் பெற்று வர ஆய்வாளரை அனுப்பியதாகத் தெரிகிறது.
அதில் ஏராளமான பணம், ஆவணங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆய்வாளர், அவரது நண்பர் மூலம் சிபிஐக்கு ரகசியத் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில்தான் அந்த இருவரையும் அடுத்தடுத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பவன் குமார் பன்சாலின் அமைச்சக ஊழியர்கள், அதிகாரிகள், தனிச் செயலர் உள்ளிட்டோரிடம் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் கோணங்கள் அனைத்தும் கடைசியாக பன்சாலை நோக்கியே சென்றதால் அவரிடம் நேரில் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் சிபிஐக்கு ஏற்பட்டது.
இது குறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவிடம் விசாரணைக் குழு கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர். இதையடுத்து, பிரதமரின் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே டெல்லியில் பன்சால் தமது பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான பன்சால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் ரெயில்வே அமைச்சராகப் பதவி ஏற்றார். ஊழல் சர்ச்சையில் சிக்கி 7 மாதங்களிலேயே அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
ரூ.10 கோடி லஞ்ச பேரம் தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications