ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை துவங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் அப்பகுதி மக்கள் பாதிகப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடியது. இதை எதிரித்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன் ஆலையை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாசுகட்டுபாட்டு வாரியத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் ஆலையில் உற்பத்தியை துவங்க அனுமதி அளித்தது.
வரும் ஜூலையில் இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்த நீதிமன்றம் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications