எகிப்தில் ராணுவ புரட்சி: வீட்டுச் சிறையில் அதிபர் மோர்சி- இடைக்கால அரசு நியமனம்
கெய்ரோ: எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மோர்சியை ராணுவம் அதிரடியாக நீக்கியுள்ளது. அவரை ராணுவம் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் முடக்கிவிட்ட ராணுவம், மூத்த நீதிபதி மன்சூரின் தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்துள்ளது.
துனீசியாவில் ஆரம்பித்த அரபு வசந்தம் பல அரேபிய நாடுகளுக்கும் பரவி நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர்களை பதம் பார்த்தது. அந்த வகையில் எகிப்து நாட்டின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கும் மக்கள் போராட்டத்தால் பதவி விலக நரேந்தது.

இதையடுத்து அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதில், இஸ்லாமிய கட்சியான முகம்மது மோர்ஸி அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவரையும் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

அதிபரின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரமும் மூண்டது. இதில் பலர் பலியாயினர்.
தலைநகர் கெய்ரோவின் தகிரிர் ஸ்கொயர் பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தினந்தோறும் கூடி அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், இவர்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தினருக்கு அவர் விடுத்த உத்தரவை அவர்கள் ஏற்கவில்லை.
இந் நிலையில், மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது ராணுவம், இந்த கெடு நேற்றிரவு முடிந்த நிலையில் ராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது. அவரை பதவி விலக வைத்து, வீட்டுச் சிறையில் அடைத்தது.

இதையடுத்து அதிபர் பதவி விலகிவிட்டதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இது ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு என மோர்சி அறிவித்துள்ளார். மேலும் எங்களிடமிருந்து மக்கள் புரட்சியை ராணுவம் பறித்துக் கொண்டுவிட்டது என்றும் மோர்சி தனது இணையத்தளத்தில் கூறியுள்ளார். அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்த சில நிமிடங்களில் அவரது இணையத்தளத்தையும் ராணுவம் முடக்கிவிட்டது.

மோரிசியின் மூத்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்திய Muslim Brotherhood அமைப்பின் தலைவரான சாத் எல் கதானியையும் ராணுவம் கைது செய்துள்ளது.
மோர்சி பதவிக்கு வந்ததில் இருந்தே பிரச்சனை இருந்து வந்தது. அவர் கொடுத்த உறுதிமொழிகளை மீறிவிட்டு அவரும் அடக்குமுறை ஆட்சியையே நடத்தினார். மேலும் தொடர் போராட்டங்களால் எகிப்தின் பொருளாதாரமும் முடங்கிப் போனதால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடும், பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடும் தலைவிரித்து ஆடி வருகிறது.

இந்தக் காரணங்களால் மோர்சி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந் நிலையில் நாட்டைக் காக்கவும் மக்களைக் காக்கவுமே மோர்சியை பதவியை விட்டு நீக்குவதாகவும், ஆட்சியைக் கைப்பற்ற விரும்பவில்லை என்றும், விரைவில் வெளிப்படையான தேர்தலை நடத்துவோம் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
ராணுவத்தின் இந்தச் செயலுக்கு முஸ்லீம் பிரதர்ஹுட் தவிர்த்த பிற முக்கிய இஸ்லாமிய, கிருஸ்துவ கட்சிகளும், நோபல் பரிசு வென்ற முன்னாள் சர்வதேச அணு சக்திக் கழக விஞ்ஞானி முகம்மத் எல் பாரடாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா வருத்தம்..
ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வைப்பதில் முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்பினருக்கு ரகசியமாக நிதி உதவி, அரசியல் உதவிகளைச் செய்த அமெரிக்கா, ராணுவத்தின் இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
விரைவில் அங்கு ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்று அதிபர் பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் மோர்சி பதவி நீக்கப்பட்டதை, ராணுவப் புரட்சி என்று ஒபாமா கூறவில்லை. இதன்மூலம் அமெரிக்காவின் 'ஆசிர்வாதம்' எகிப்து ராணுவத்துக்கு இருப்பதும் உறுதியாகிறது.

நாடு முழுவதும் ராணுவ கவச வாகனங்கள் சுற்றி வந்து கொண்டுள்ளன. முஸ்லீம் பிரதர்ஹுட் உள்ளிட்ட சில அமைப்புகளின் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டுவிட்டன. மோர்சிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஊழியர்களையும் ராணுவம் கைது செய்துள்ளனர்.
மோர்சியை பாதுகாக்க வேண்டிய அதிபரின் சிறப்பு கமாண்டோக்களும் ராணுவப் புரட்சிக்கு ஆதரவாக அதிபர் மாளிகையில் ஏறி பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications