முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து கேரளா அரசும் வழக்கு தொடர்ந்தது. இதில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதும் இதை பின்பற்றாமல் இருக்க தனிச்சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. ஆர்.எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் எச்.எல்.தட்டூ, மதன்.பி.லோகூர், எம்.ஒய்.இக்பால், சந்திரமெளலி குமார் பிரசாத் ஆகியோர் இன்று இந்த வழக்கை விசாரித்தனர்.
தமிழகத்துக்கு உரிமை உண்டா?
அப்போது, 1886 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் இந்திய அரசு இடையேதானே ஒப்பந்தம் போடப்பட்டது. அப்படியானால் தமிழகம் எப்படி முல்லைப் பெரியாறு அணையில் உரிமை கோர முடியும் என்று 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. மேலும் தமிழக அரசு சரியான புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினர்.
உரிமை உண்டு- தமிழக அரசு
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு ஆறு தமிழகத்தின் வழியே ஓடுகிறது. 1935ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிட்டார்.
அணைக்கு பாதிப்பு- புதிய அணை அவசியம்
கேரள அரசு தரப்போ, நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று வாதிட்டது.
புதிய அணை அவசியம் இல்லை- தமிழக அரசு
ஆனால் தமிழக அரசு தரப்பில் நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் என்று ஐவர் பெஞ்ச் ஒத்திவைத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications