ஈரோடு 'கறுப்பு ஜூலை' கருத்தரங்கம்… திருமாவளவனுக்கு தடை
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடைபெற இருந்த கறுப்பு ஜூலை என்ற கருத்தரங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இன படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 25ல் கறுப்பு ஜூலை என்ற பெயரில் கருத்தரங்கு ஈரோட்டில் நடப்பதாக இருந்தது.
ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த இந்த கருத்தரங்கு நடப்பதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வினாயக மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வந்தனர்.
இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கருத்தரங்கம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இது பற்றி ஈரோடு டவுன் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா அளித்து உள்ள அனுமதி மறுப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை இன படுகொலையை கண்டித்து நடக்கும் கறுப்பு ஜூலை கருத்தரங்கில் இன கலவரத்தை தூண்டும் வகையில் பேசி சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் கோவை, நீலகிரி, மாவட்டங்களில் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வாகனங்களில் வரும் போது அசம்பாவித சம்பவம் ஏற்படவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கருத்தரங்குக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அனுமதி மறுப்பை மீறி கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications