தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
சென்னை: தெலுங்கானாவை தனி மாநிலமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடப்பதால் தமிழகம்-ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவை தனி மாநிலமாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாத், நெல்லூர், விஜயவாடா, கர்ணூல், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி, திருமலைக்கு தினமும் பேருந்துகள் விடப்படுகின்றன. ஆனால் ஆந்திராவில் தற்போது நிலவும் பதட்டமான சூழலால் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்போது இயக்கப்படவில்லை. சித்தூர், திருப்பதி, கடப்பா ஆகிய பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து சேவை நிறுத்தத்தால் ஆந்திரா செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications