ஹிரோஷிமா-ன் 68வது நினைவு நாள்: அணு குண்டு வீச்சில் உயிர் தப்பிய 2 லட்சம் ஜப்பானியர் பிரார்த்தனை
டோக்கியோ: இன்று ஹிரோஷிமா அணு குண்டு வீச்சின் 68 வது நினைவு நாள். அந்தக் கொடூர தாக்குதலில் உயிர் தப்பிய சுமார் 2 லட்சம் மக்கள் ஒன்று கூடி உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயம், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது. இதில் லட்சக் கணக்கான மக்கள் பலியாகினர். பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் அரிதியிட்டுக் கூற முடியாத படி, அந்நகரங்களில் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் அதன் பாதிப்பு தொடரத்தான் செய்கிறது.
அதிகாலை நேரம் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தான் ஹிரோஷிமா மீது முதல் அணு குண்டு வீசப்பட்டது. இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் பலியானார்கள்.
அந்தக் கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் மற்றும் அவர்களது சந்ததியினர், பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய வருடந்தோறும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வழக்கம்போல், இந்தாண்டும், சுமார் 2 லட்சம் ஜப்பானியர்கள் இன்று காலை ஹிரோஷிமா நகரில் கூடி அணு குண்டு வீச்சில் பலியான மக்களின் ஆன்மா சாந்தியடைய ஊதுபத்திகளை ஏற்றி பிராத்தனை செய்தனர்.
பிராத்தனையில் பங்கு கொண்ட ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி இது குறித்துக் கூறுகையில், 'அணு குண்டு என்பது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட கெடுதலான ஆயுதம். இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இந்த தீமையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே, அணு உலைகளை மீண்டும் இயக்கும் முயற்சியை நமது அரசு கைவிட வேண்டும். அணு தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்குவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications