பத்திரிகையாளர்களுக்கு நுழைவுத் தேர்வு, லைசென்ஸ் .. 'ஐடியா' கொடுக்கும் மணீஷ் திவாரி!

டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய மணீஷ் திவாரி, கடந்த வாரம் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக செய்தி தொலைக்காட்சி சேனல் இப்படி நடந்து கொண்டது, ஊடகமும் வர்த்தகமயமாகிவிட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்த சேனலின் பங்குதாரர்களில் ஒருவர் ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போய்விட்டார். என்னால் உதவ முடியாது போனாலும் வெளிப்படையாக ஊடகம் வர்த்தகமாகிப் போய்விட்டது என்று சொல்ல முடியும். நாடறிந்த நல்ல பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேர் அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவ துறை மற்றும், பார் கவுன்சில் ஆகியவற்றில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது போல் பத்திரிகை துறையிலும் பொது நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பத்திரிகையாளர் ஆவதற்கான உரிமம் கொடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு, தரத்தை நிர்ணயிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சில பத்திரிகை நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றுவோருக்கு, சிறப்பான பயிற்சிகள் கொடுக்கின்றன. சில நிறுவனங்கள், இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பது இல்லை.
தற்போதைய சூழலில் பிரிண்ட் மீடியா மிகவும் நலிவடைந்து வருகிறது. அதன் சர்க்குலேசன் எண்ணிக்கை சரிந்து கொண்டிருக்கிறது. நாட்டில் 798 சேனல்கள் இருக்கின்றன. இதில் 415 செய்தி சேனல்கள். இவை அனைத்தும் விளம்பரங்களை நம்பியே இருக்கின்றன. இதனால் உணர்ச்சிவசப்பட வைக்கின்றன செய்திகளை முன்கூட்டியே கொடுக்க இவை முனைகின்றன. இதனால் தனிநபர் சுதந்திரத்தை மீறத் தூண்டுகிறது.
நம்மைப் பொறுத்தவரையில் பிரிண்ட் மீடியா, தொலைக்காட்சி, இணையம் அனைத்தும் ஒன்றுதான்.
அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கி, செய்திகளை வெளியிடும் போக்கை குற்றம் என அறிவிப்பது அபராதம் விதிப்பது, உரிமத்தை நிறுத்தி வைப்பது ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
டிவி சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது 12 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டுமே விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்ற ஆலோசனை குறித்து மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications