பத்திரிகையாளர்களுக்கு நுழைவுத் தேர்வு, லைசென்ஸ் .. 'ஐடியா' கொடுக்கும் மணீஷ் திவாரி!

டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய மணீஷ் திவாரி, கடந்த வாரம் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக செய்தி தொலைக்காட்சி சேனல் இப்படி நடந்து கொண்டது, ஊடகமும் வர்த்தகமயமாகிவிட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்த சேனலின் பங்குதாரர்களில் ஒருவர் ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போய்விட்டார். என்னால் உதவ முடியாது போனாலும் வெளிப்படையாக ஊடகம் வர்த்தகமாகிப் போய்விட்டது என்று சொல்ல முடியும். நாடறிந்த நல்ல பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேர் அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவ துறை மற்றும், பார் கவுன்சில் ஆகியவற்றில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது போல் பத்திரிகை துறையிலும் பொது நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பத்திரிகையாளர் ஆவதற்கான உரிமம் கொடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு, தரத்தை நிர்ணயிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சில பத்திரிகை நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றுவோருக்கு, சிறப்பான பயிற்சிகள் கொடுக்கின்றன. சில நிறுவனங்கள், இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பது இல்லை.
தற்போதைய சூழலில் பிரிண்ட் மீடியா மிகவும் நலிவடைந்து வருகிறது. அதன் சர்க்குலேசன் எண்ணிக்கை சரிந்து கொண்டிருக்கிறது. நாட்டில் 798 சேனல்கள் இருக்கின்றன. இதில் 415 செய்தி சேனல்கள். இவை அனைத்தும் விளம்பரங்களை நம்பியே இருக்கின்றன. இதனால் உணர்ச்சிவசப்பட வைக்கின்றன செய்திகளை முன்கூட்டியே கொடுக்க இவை முனைகின்றன. இதனால் தனிநபர் சுதந்திரத்தை மீறத் தூண்டுகிறது.
நம்மைப் பொறுத்தவரையில் பிரிண்ட் மீடியா, தொலைக்காட்சி, இணையம் அனைத்தும் ஒன்றுதான்.
அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கி, செய்திகளை வெளியிடும் போக்கை குற்றம் என அறிவிப்பது அபராதம் விதிப்பது, உரிமத்தை நிறுத்தி வைப்பது ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
டிவி சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது 12 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டுமே விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்ற ஆலோசனை குறித்து மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications