நான் அமைச்சரானது எப்படி?: சொல்கிறார் ஜார்க்கண்ட் அமைச்சர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில் அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸைச் சேர்ந்த யோகேந்திர சாஹூ தனக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் டெல்லியில் 15 நாட்கள் இருந்தேன். புதிய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியலில் முதலில் என் பெயர் இல்லை.
இதையடுத்து பதவிக்காக அகமது பட்டேல் முதல் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரை பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருந்தது. நான் என்ன செய்தேன் என்பதை விளக்கமாக கூற முடியாது.
அரசியலில் ஒருவர் ஷூக்களை சரி செய்வது முதல் பஜனை செய்வது வரை பலவற்றை செய்ய வேண்டி உள்ளது. நான் ஒரு விவசாயியின் மகன். அதனால் தான் நான் விவசாயத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு பல அமைச்சகங்கள் வேண்டும். நான் பிச்சை எடுப்பவன் இல்லை. எனக்கு எப்படி பறிப்பது, திருடுவது என்று தெரியும் என்றார்.
கடந்த 2010ம் ஆண்டில் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் வாங்க முன்வந்தபோது சாஹூ சிக்கினார். இது உள்பட அவர் மீது 11 வழக்குகள் உள்ளன. அதனால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் முதலில் தயங்கியது.
ஜார்க்கண்ட் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்ய அக்கட்சி 40 நாட்கள் எடுத்துக் கொண்டது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications