கப்பலுக்குள் விஷ வாயு கசிவு... 2 பணியாளர்கள் மரணம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நான்காவது சரக்கு தளத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து மரத்தடிகள் இறக்கும் பணிகள் நடந்தது. இந்த மரத்தடிகள் தூத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜான் தனியார் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதியானது.
சரக்கு கப்பலின் ஒரு கேப்சர் பகுதியில் மரத்தடிகள் இறக்கப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் மரத்தடிகளை சரிபார்த்தனர். மரத்தடிகள் ஏதும் கப்பலின் உள்ளே உள்ளதா-? என்பதை பார்ப்பதற்காக தனியார் நிறுவன பணியாளர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த விக்டர்மோகன்(40), லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த ஜோபாய் (50) இருவரும் சரக்குகப்பலின் முதல் பகுதி கேட்சர் பகுதிக்குள் இறங்கி சோதனை மேற்கொண்டனர்.
இந்தநேரத்தில் அந்த தளத்தின் கதவு திடீரென்று மூடப்பட்டது. இதனால் உள்ளே சிக்கியவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். மேல்தளத்தில் நின்ற பணியாளர்கள் தங்களது சகபணியாளர்கள் இருவர் திடீரென்று மாயமானது கண்டு அவர்களை தேடினர்.
சரக்கு கப்பலின் கேட்சர் பகுதி மூடியை திறந்து பார்த்தபோது இரண்டு பணியாளர்களும் உள்ளே மயங்கி கிடந்தனர். உடனடியாக இருவரும் மீட்க்கப்பட்டு துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ஒருவர் இறந்துவிட்டார். தலையில் காயம் அடைந்த நிலையில் இருந்த மற்றொரு பணியாளர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இருந்தபோதும் அவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் விபத்தினால் மரணம்(174) என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் ஏற்றப்படும் மரத்தடிகளில் இருக்கும் விஷஜந்துகளான பாம்பு, தேள், பூரான் போன்ற உயிரினங்கள் இறப்பதற்காக மரத்தடிகள் ஏற்றியபின்பு கேட்சருக்குள் விஷமருந்து அடிப்பது வழக்கமாகும். இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகள் இறக்கியபின்பு அந்த கேட்சர் பகுதிக்குள் பணியாளர்கள் சிக்கியபோது அந்த விஷமருந்தின் விஷவாயு தாக்கத்தால் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications