ரூபாய் மதிப்பு சரிவுக்கு மத்திய அரசே காரணம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சாடல்!
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கூறுகையில், நாட்டின் வளர்ச்சி தடைபடுவதற்கு 2009 முதல் 2012ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் மத்திய அரசு தலையிட்டதே காரணம்.
சந்தை விநியோக சிக்கல்கள், அரசின் நிர்வாக பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கின்றன.
தற்போதும் கூட நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகவே உள்ளது. இந்த பற்றாக்குறை அதிகரிப்பதற்கும், அரசின் சில நிர்வாக முடிவுகளே காரணம் என்றார்.
நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிதான் காரணம் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட, உள்நாட்டு காரணிகளும் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்கிறார்.
ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநரோ மத்திய அரசுதான் காரணம் என்று கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.