2 வாரத்திற்குள் சென்னையில் பெட்டிக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை நகரில் பொதுமக்களுக்கு இடையூறான வகையில வைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளளது.
இதுதொடர்பாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை நகரில் மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகடைகளை அகற்ற உத்தரவிடக் கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அவற்றை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி அதைச் செய்யவில்லை.
இதையடுத்து இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார் ராமசாமி. இந்த மனுவை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ்குமார் அகர்வால்,நீதிபதிசத்தியநாராயணாஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் தாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். மேலும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்குகையில், மொத்தம் உள்ள 518 கடைகளில் 339 கடைகள் அகற்றப்பட்டதாகவும், 119 கடைகள் மீதான உத்தரவு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், மீதம் 60 கடைகள் மட்டுமே அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள் மீதம் உள்ள பெட்டிக் கடைகளை 2 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications