தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை
சென்னை: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
ஆச்சி குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.ஏ.டி பத்மசிங் ஐசக் மே-17ம் தேதி மாலை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பான ரூ.1 கோடியை வழங்கினார்.

அப்போது அவருடன் ஆச்சி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் அவருடைய இரு மகன்கள் திரு அஸ்வின் பாண்டியன் மற்றும் திரு. அபிஷேக் அபிரகாம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அவர்கள், முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.ல்.ஏ திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தலைமை செயலகத்தில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்தனர்.

இந்த முயற்சி பற்றி ஆச்சி நிறுவனர் திரு ஏ.டி பத்மசிங் ஐசக் அவர்களிடம் கேட்டபோது, இது எங்களுடைய தரப்பிலிருந்து ஒரு சிறிய பங்களிப்பு மட்டுமே என்றும், மேலும் இந்த தொற்று நோயை ஒன்றிணைந்து எதிர்த்து போராடும் அனைத்து அமைச்சர்கள், மருத்துவ அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள், மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. தமிழக அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் பாரட்டுதலுக்குறியது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications