சேட்டு கடையில் “லலிதா ஜுவல்லரி” மாடல்.. ஜெயங்கொண்டத்தில் 200 சவரன் நகை கொள்ளை! ஓட்டை போட்டு “ஆட்டை”
அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் நகை அடகு கடையில் சுவற்றில் துளையிட்டு 200 சவரன் தங்க நகை கொள்ளை கொள்ளையர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜிபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் குடும்பத்துடன் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மீன் சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் கணேஷ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

சுவற்றில் துளை
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி சங்கர் கடையை பூட்டி விட்டு வழக்கம் போல வீட்டிற்கு சென்று இருக்கிறார். இதையடுத்து மீண்டும் கடைக்கு சென்ற உரிமையாளர் சங்கர் மற்றும் பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது உள்ளே சுவற்றில் துளையிட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை கொள்ளை
இதனை அடுத்து சங்கர் கடையில் இருந்த நகைகள் ஏதும் திருட்டுபோய் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்ததில் சுமார் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருந்ததை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

தீவிர விசாரணை
சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து அடையாளம் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகை அடகு கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆந்திர போலீஸ் விசாரணை
மேலும் இதேபோல் ஆந்திர மாநிலம் கங்காதநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவர் துளையிட்டு வட மாநில கொள்ளையர்கள் லாக்கர் உடைக்க முடியாததால் பின்னர் பாப்பாக்குடியில் உள்ள கடையில் சுவர் துளையிட்டு உடைத்து திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆந்திர மாநில போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை
இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்து இருக்கும் பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications